Saturday 20 July 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19.07.13 அன்று அசருக்குபின் நோன்பு தரும் பாடம் என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் உரை நிகழ்த்தினார்கள்.

இப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக தொண்டி மர்கஸில் வைத்து ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்காக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. 19.07.13 அன்று பள்ளிக்கு ஓதவரும் மாணவிகள் பெண்களுக்கும் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். இதில் ஆண்களும், பெண்களும் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.




Monday 8 July 2013

ரமலான் சிறப்பு கருத்தரங்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.07.13 அன்று தொண்டி தவ்ஹீத் மர்கசில் ரமலான் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்களும், நரகில் இருந்து காக்கும் நபிவழி என்ற தலைப்பில் சகோதரர் ராஜ் முஹம்மது அவர்களும் உரையாற்றினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



மின்துறையின் அவலத்தைக் கண்டித்து

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை 05.07.13  அன்று தொண்டியும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. மின்துறையின் அவலத்தைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மின்துறையை கண்டித்து போராட்டம் அறிவித்து பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.