Saturday 9 June 2012

தொண்டியில் ஊர்வலம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்... 
தர்கா வழிபாட்டை எதிர்த்து தொண்டியில் நடைபெற்ற ஊர்வலம் 

அல்லாஹுடைய மாபெரும் கிருபையில் ஏகத்துவப் பிரச்சாரம் தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழக வரலாற்றில் முதன் முறையாக தொண்டியில் தர்கா வழிபாட்டை கண்டித்து ஒரு பேரணி நடைபெற்றது. கடந்த 01.06.12 அன்று வெள்ளிகிழமை அசர் தொழுகைக்கு பிறகு நெ.கா.சுலைஹா மஹாலில் இருந்து பேரணி புறப்பட்டது . பேரணியில்
"பன்றியின் இறைச்சியும், கந்தூரி சோறும் ஹராம்தான் ",
"உலமா சபையே கந்தூரி விழாவை கண்டிக்காதது ஏன்",
"இணை வைத்தலுக்கு துணை போகும் ஆலிம்களே இது நியாயம் தானா",
"இறை கட்டளையை மீறி துறவறம் போன மழுங்கு அப்பா அவ்லியா இல்லை "
என்று முழங்கிய  கோசங்களை கேட்ட தர்கா வணங்கிகள் பலரை கலங்க வைத்தது போலி இமாம்களை ஓடி ஒளிய வைத்தது ஊர்வலத்தின் போது எதிர் வரும் ஒவ்வொரு தர்கா வழிபாட்டு தளத்திலும் சிறுமிகள் ஆற்றிய உரை பழமை வாதிகள் பலரை தலை குனிய வைத்தது. இதற்கு தொண்டி கிளை தலைவர் சிராஜுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இறுதியாக ஏழு மணிக்கு பாவோடியில் மவ்லவி யாசிர் அரபாத் அவர்கள் ஆற்றிய கண்டன உரையில் பன்றி இறைச்சிக்கு சமமான கந்தூரி சோறும் ஹராம்தான் என்பதை அழுத்தமாக கூறினார்.













No comments:

Post a Comment