Tuesday 12 June 2012

கந்தூரி விழாவை எதிர்த்து

திணறியது தொண்டி!     மழுங்கியது மழுங்கு அப்பா கந்தூரி!!


அல்லாஹ்வின் பேரருளால் ஏகத்துவ கொள்கை முழக்கம் தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கும் எழுச்சி பெற்று வரும் வேளையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஏகத்துவ எழுச்சிக்கு அல்லாஹ் வெற்றியை தந்து கொண்டிருக்கிறான் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கேதொண்டியினுடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் தொண்டியில் இணை வைப்புக்கு எதிராக களம் இறங்கி வெள்ளி அன்று மிகப்பெரிய விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.05.06.12அன்று தொண்டியின் வட பகுதியில் உள்ள மழுங்கு சாகிபு தர்கா கந்தூரி நடை பெற இருந்தது இந்த கந்தூரி விழாவில் வான வேடிக்கைகளும்சந்தன குடம் எடுத்து அந்த சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது என்பதை அறிந்து வடக்கு தெருவை சார்ந்த கொள்கை சகோதரர்கள் வடக்கு தெரு நிர்வாகத்தை அணுகி அல்லாஹ்வுக்கு இணை வைக்கக்கூடிய இந்த காரியம் தவறானது என்று எடுத்து சொல்லி வடக்குத் தெரு நிர்வாக தலைவர் அதை பெறுமனதோடு ஏற்று இந்த அனாச்சாரங்களை நடத்தக்கூடாது என்று கண்டிப்பான முறையில் உத்தரவிட்டார்இந்த உத்தரவை மீறி தொண்டி கிழக்கு பகுதியில் இருந்து வழக்கமாக சந்தன குடம் எடுக்கக்கூடிய ஒரு குடும்பம் சந்தன குடம் எடுத்து வரும் செய்தி அறிந்து கொள்கை சகோதரர்கள் பெருந்திரளாக கூடியதில் மழுங்கு சாகிபு தர்கா வளாகம் திணறியதுஇந்த நேரத்தில் தொண்டி ஆஸ்பத்திருக்கு அருகில் சந்தன குடத்தை பையில் வைத்து கொண்டு வரும் பொழுது அது தடுத்து நிறுத்தப்பட்டு சந்தனங்கள் கீழே கொட்டப்பட்டு மிக பெரிய அனாச்சாரம் தடுக்கப்பட்டதுவான வேடிக்கைகளும் கொள்கை சகோதர்களின் வீரியமிக்க உணர்வால் வான வேடிக்கை நடைபெறாமல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுஇந் நேரத்தில் ஒரு சிறிய பதற்றம் நிலவினாலும் அந்த பதற்றத்தை கொள்கை சகோதர்களுக்கு சாதகமாக்கி ஏகத்துவ எழுச்சிக்கு வெற்றியாக்கி தர்கா வணங்கிகளான இணை வைப்பவர்களுக்கு முகத்தில் கறியை பூசிதொண்டியினுடைய மற்ற பகுதியிலுள்ள தர்கா வணங்கிகளுக்கு உள்ளத்தில் அச்சம் ஏற்படும் வகையில் அமைத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.



No comments:

Post a Comment