Wednesday 5 September 2012

மச்சூரில் புதிய கிளை ஆரம்பம்

  ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகில் இருக்கும் மச்சூர் என்ற கிராமத்தில் 04.09.2012 செவ்வாய் கிழமை மகரிப் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக தெருமுனை பிரச்சாரமும், பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது. TNTJ யின் பணிகள் என்ற தலைப்பில் தொண்டி கிளை தலைவர் கலிபுல்லா அவர்களும், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மவ்லவி யாசிர் அரபாத் அவர்களும் பதிலளித்தார்கள்.
  நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட செயலாளர் சிராஜுதீன் அவர்கள் தலைமையில் மச்சூர் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment