Sunday, 11 August 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10.08.13 அன்று இஷாவிற்கு பிறகு சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது என்ற தலைப்பில் சகோதர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.பயான் நிகழ்ச்சி


பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.08.13 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை தொண்டி ஈத்கா திடலில் நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து இறையச்சம் என்ற தலைப்பில் சகோதர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



பித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக பித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் கூட்டாக வசூல் செய்து முறையாக ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் இரண்டு லட்சத்து முப்பத்தி இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் 360 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.



இரவுத்தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ரமலான் மாதம் முழுவதும் தொண்டி மர்கஸில் இரவுத்தொழுகை நடத்தபட்டது. அதை தொடர்ந்து நபிமார்களின் வரலாறு என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். இதில் தினமும் ஆண்களும், பெண்களும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



கேள்வி & பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ரமலான் மாதத்தின் இறுதி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் இரவு தொழுகைக்குப் பிறகு கேள்வி & பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சரியான பதிலை தரும் சகோதர, சகோதரிகளுக்கு உடனடியாக பரிசும் வழங்கப்பட்டது. சிறப்பு கேள்விகளுக்கு பதிலளிக்கும் நபர்களுக்கு புஹாரி ஹதீஸ் நூல் பரிசாக வழங்கப்பட்டது. 



Saturday, 10 August 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ரமலான் மாதத்தின் இறுதி ஒற்றைப்படை இரவுகளில் இரவு தொழுகைக்குப் பிறகு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்கள்.



Saturday, 20 July 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19.07.13 அன்று அசருக்குபின் நோன்பு தரும் பாடம் என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் உரை நிகழ்த்தினார்கள்.

இப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக தொண்டி மர்கஸில் வைத்து ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்காக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. 19.07.13 அன்று பள்ளிக்கு ஓதவரும் மாணவிகள் பெண்களுக்கும் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். இதில் ஆண்களும், பெண்களும் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.




Monday, 8 July 2013

ரமலான் சிறப்பு கருத்தரங்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.07.13 அன்று தொண்டி தவ்ஹீத் மர்கசில் ரமலான் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்களும், நரகில் இருந்து காக்கும் நபிவழி என்ற தலைப்பில் சகோதரர் ராஜ் முஹம்மது அவர்களும் உரையாற்றினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



மின்துறையின் அவலத்தைக் கண்டித்து

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை 05.07.13  அன்று தொண்டியும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. மின்துறையின் அவலத்தைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மின்துறையை கண்டித்து போராட்டம் அறிவித்து பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.