Monday 27 August 2012

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.08.12 திங்கள்கிழமை  அன்று மாலை மஹ்ரிபு தொழுகைக்குக்குப் பின் தெருமுனை பிரச்சாரம் தொண்டி பாவோடி மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 21.08.12 அன்று தொண்டி த.மு.மு.க.வினர் தெருமுனைக் கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றியும், உணர்வு பத்திரிக்கை பற்றியும், P.J. அவர்களை பற்றியும் தவறாக விமர்சித்தனர். அவர்களுக்கு பதில் கொடுப்பதற்காக தெருமுனை பிரச்சாரத்தில் சகோ.யாசிர் அரபாத் அவர்கள்,
  • சுனாமிக்கு செய்ததை மக்களுக்கு முறையாக கணக்கு காட்டாதது.
  • இள.கணேசனுடன் கைகோர்த்தது,மரண தண்டனையை தடை செய்யக்கோரி பொதுக்கூட்டத்தில் உரையாற்றியது.
  • சுனாமிக்காக வசூல் செய்த தொகையை வைத்து த.மு.மு.க.விற்காக சொந்த இடம் வாங்கி பேரிடர் மையம் கட்டியது
போன்ற த.மு.மு.க.வின் சமூக துரோகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அடுத்தபடியாக தொண்டி கிளை தலைவர் E.R.A. கலிபுல்லா அவர்கள் தொண்டி த.மு.மு.க. நிர்வாகிகளின் வண்டவாளங்களை தோலுரித்து காட்டினர். இக்கூட்டம் 7 மணிக்கு ஆரம்பித்து 8.30 வரை ஏராளமான மக்கள் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது.






No comments:

Post a Comment