Saturday 13 September 2014

புதியதலைமுறை தொலைக்காட்சி அக்னி பரீட்சையில் மாநிலத் தலைவர் பதில் அளிக்கின்றார்கள் இன்ஷா அல்லாஹ்!

நாளை (ஞாயிறு 14-9-2014) இரவு 7.30 மணி முதல் 8.30 வரை புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் மாநில தலைவர் பி.ஜே அவர்கள் கலந்து கொண்டு பதில் அளிக்க இருக்கின்றார்கள் இன்ஷா அல்லாஹ்.
காணத்தவறாதீர்கள்.
10612637_824233320944196_4978655359645054196_n
✔தவ்ஹீத் என்று பெயர் வைத்து முஸ்லிம்களிடம் தனித்துக் காட்டுவது ஏன்?
✔தவ்ஹீத் கொள்கைகளை ஏற்காத இமாம்களை நீங்கள் விமர்சிப்பது ஏன்?
✔இந்துக்கள் தர்காவுக்கு செல்வதை விமர்சிக்கின்றீர்களே…?
✔உங்களுடைய பிரச்சாரத்தினால் தந்தை-மகனுக்கு மத்தியில் பிளவுகள் எற்பட்டிருக்கிறதே?
✔சூனியம் வைக்க சொல்லி சவால் விட்டிருப்பதன் நோக்கம் என்ன?
✔பரிசுத்தொகையாக அறிவித்த 50 லட்சம் ஏது?
✔”சூனியம் வைத்து பாதிப்பு ஏற்படுத்தினால் 50 லட்சம்” என்று அறிவித்திருப்பது சூதாட்டமாகாதா?
✔நபிகள் நாயகம் இப்படி பந்தயம் செய்தார்களா?
✔அல்-காயிதாவை கண்டித்து போஸ்டர் ஒட்டித்தான் தங்களின் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டுமா?
✔பயங்கரவாத செயல்களில் முஸ்லிம்கள்தானே ஈடுபடுகிறார்கள்?
✔பயங்கரவாதிகளாக கைது செய்யப்படும் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்தானே?
✔சிறுபான்மையினரின் மதரஸாக்களை புதுப்பிக்க 100 கோடி நிதி ஒதுக்கிய மோடி அரசின் திட்டம் பற்றி உங்கள் கருத்து?
✔ISIS அமைப்பில் இணைத்துக் கொள்ள தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள்தானே முன்வந்திருக்கிறார்கள்?
✔RSS, BJP -தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதில் முஸ்லிம்கள்தானே கைது செய்யப்படுகிறார்கள்?
✔மோடியை ஒட்டு மொத்த மக்களும் ஆதரித்திருக்கின்றார்களே?
-இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சகோ. பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்.

No comments:

Post a Comment