Wednesday 31 October 2012

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்.
 

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு
A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்
டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்
விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்
விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்
சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,
அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது
எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்
உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக
விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்
இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)
இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது
மனிதனால் பறக்க முடிவும் என்பது பற்றி இறைவன் திருமறையில்…
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.
அல்குர்அன் 55-33


Tuesday 30 October 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 30.10.12 செவ்வாய்கிழமை அன்று மஹ்ரிபுக்கு பின் பேராசை என்ற தலைப்பில் சகோதரர் ஓயசுல் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.10.12 அன்று தொண்டி ஓடாவி தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அடிப்படைக் கொள்கை என்ற தலைப்பில் சகோதரர் ஓயசுல் உரை நிகழ்த்தினார்.

Monday 29 October 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.10.12 அன்று மஹ்ரிபுக்கு பின் மர்கஸில் இப்ராஹிம் நபியின் ஏகத்துவ பிரச்சாரம் என்ற தலைப்பில் சகோதரர் ஓய்சுல் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

கூட்டு குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 28.10.12 அன்று 16 மாடுகள் கூட்டு குர்பானிக்காக வழங்கப்பட்டது. தொண்டி, வட்டாணம், மச்சூர், P.V. பட்டிணம், வீரசிங்கமடம், புதுப்பட்டிணம் ஆகிய ஊர்களுக்கு கறி வழங்கப்பட்டது.  95 ஆட்டுத் தோலும், 18 மாட்டுத் தோலும் வசூல் செய்யப்பட்டது.

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.10.12 சனிக்கிழமை மழையின் காரணமாக தொண்டி தவ்ஹீத் மர்கஸ் முன்பு உள்ள நாச்சியா மஹாலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

Wednesday 24 October 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 24.10.12 புதன்கிழமை அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் தொண்டி மர்கஸில் ஜாக் வெளியிட்ட பிறை குழப்ப நோட்டீஸிற்கு வரிக்கு வரி மவ்லவி எம்.யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் குர்ஆன் & ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்கள். இதில் பல சகோதரர்கள் பங்கெடுத்தனர். அல்ஹம்துலில்லாஹ்

Tuesday 23 October 2012

பயான் நிகழ்ச்சி

ஜாக் சார்பாக தொண்டியில் வரும் வியாழக்கிழமைதான் அர(f)பா நோன்பு நோற்க வேண்டும், அர(f)பாவில் அன்றுதான் ஹாஜிகள் கூடுவார்கள் என்ற பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அதற்கு மறுப்பு விளக்கமளிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 23.10.12 செவ்வாய்கிழமை மஹ்ரிபுக்கு பின் தொண்டி மர்கஸில் சகோதரர் L.மஷாரிக் அவர்கள் ர(f)பா நாள் எது? ஒரு விளக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


Monday 22 October 2012

நோட்டிஸ் விநியோகம்

22.10.12 திங்கள்கிழமை மச்சூர் கிளை சார்பாக சத்தியத்தை எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.






பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.10.12 திங்கள்கிழமை மஹ்ரிபுக்கு பின் தொண்டி மர்கஸில் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்.



Sunday 21 October 2012

தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.10.12 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபுக்கு பின் தனிநபர் தாவாவில் வடை வண்டிக்காரரை தொழுகைக்காக அழைப்புவிடப்பட்டது.

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.10.12 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபுக்கு பின் தொண்டி மர்கஸில் சபி(f)ன் ஒழுங்குகள் என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்.

தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 20.10.12 சனிக்கிழமை இஷாவுக்கு பின் தனிநபர் சந்திப்பில் தொண்டியில் ஒரு சுன்னத் ஜமாஅத் பள்ளியின் முஅத்தீன்(பிலால்) மவ்லிது, தட்டு, தகடு, தாயத்து, தர்ஹா வழிபாடு ஆகியவற்றை செய்யக்கூடியவராக இருந்ததால் அந்த சகோதரரை நம்முடைய இடத்திற்கு வரவழைத்து அவருக்கு இஸ்லாமிய அடிப்படை கொள்கை பற்றி விளக்கப்பட்டது. மவ்லிதில் உள்ள இணைவைப்பு வரிகள் பற்றியும், தர்ஹா வழிபாடு ஓர் இணைப்பு என்பதையும் விளக்கப்பட்டது. அவரும் நம்மிடையே கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதில் கொடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் இந்த கலந்துரையாடல் நடந்தது. இறுதியில் இஸ்லாமிய அடிப்படை கொள்கை, தர்ஹா வழிபாடு, ஏகத்துவமும் இணைவைப்பும் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.


Saturday 20 October 2012

வன்னியர் சங்கத்தின் போஸ்டர்

தொண்டியில் உள்ள செய்யது முஹம்மது அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெயயக்கோரி வன்னியர் சங்கத்தின் போஸ்டர் தொண்டியில் ஒட்டப்பட்டது.

ஜும்ஆ பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19.10.12 அன்று தொண்டி மர்கஸில் நட்புக்கு இலக்கணம் என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்.


பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19.10.12 வெள்ளிகிழமை மஹ்ரிபு தொழுகைக்கு பின் வீரசிங்கமடம் என்ற கிராமத்தில் பெண்கள் பயான் & கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்.


தொண்டியில் பலத்தமழை

தொண்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 19.10.12 அன்று இரவு பலத்தமழை பெய்தது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தொண்டியில் 27cm மழை பதிவாகியுள்ளது.



பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 17.10.12 செவ்வாய்கிழமை மஹ்ரிபுக்கு பின் பிறை என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

Tuesday 16 October 2012

தொண்டி மர்கஸில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை மதுரை மாவட்ட வில்லாபுரம் கிளை சகோதரர்கள் வந்து நலன் விசாரித்தனர்.


ஜும்ஆ பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை மர்கஸில் 12.10.12 வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


நோட்டீஸ் விநியோகம்

மச்சூர் கிளை சார்பாக 13.10.12 சனிக்கிழமை குர்ஆன் & ஹதீஸ் அடிப்படையில் 20 கேள்விகள் கொண்ட துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. சரியான பதில் எழுதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தங்க நாணயம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


தாவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.10.12 வெள்ளிக்கிழமை செய்யது முஹம்மது அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த நம் சகோதரர்களுக்கு இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு என்பதை யாசிர் அரபாத் விளக்கினார்.


மாற்று மத சகோதரர்களுக்கு தாவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.10.12 வெள்ளிக்கிழமை செய்யது முஹம்மது அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை பற்றி விளக்கப்பட்டது.


Thursday 11 October 2012

பிளக்ஸ் போர்டு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை மர்கஸ் செல்லும் வழி என்ற பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது.



பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 11.10.12 வியாழக்கிழமை மரிபு தொழுகைக்கு பிறகு வக்து ஆரம்ப நேரத்தில் பாங்கு சொல்வது ஏன்? என்ற தலைப்பில் சகோதரர் எம். யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


மச்சூரில் சுவர் விளம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 11.10.12 வியாழக்கிழமை மச்சூர் கிளையில் கரும்பலகை ஒன்றும் குர்ஆனின் 112வது (இஹ்லாஸ்) அத்தியாயத்தின் அனைத்து வசனங்களும் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.



தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10.10.12 புதன்கிழமை அன்று அஸருக்கு பின் கடை பஜாரில் தொழுகையின் அவசியம் பற்றியும், இஸ்லாமிய அடிப்படை கொள்கை பற்றியும் ஆண்களை சந்தித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது.





Wednesday 10 October 2012

கல்வி உதவி

தொண்டி ஓடாவி தெருவை சேர்ந்த சகோதரி ராபியாம்மாள் அவர்களுக்கு ரூபாய் 16000/- செலவில் ஒருவருட ஆலிமா பட்டபடிப்பு படிப்பதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Monday 8 October 2012

மாவட்ட தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 06/07.10.12 சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது.
இந்த தர்பியாவில் காவல் துறையில் அணுகும் முறை, அழைப்பு பணியின் அவசியம், அவசர கால உதவிகள், இரத்த தான உதவிகள், செயல்பாடுகளில் அணுகவேண்டிய முறைகள், ஜனாஸாவின் சட்ட திட்டங்கள் மற்றும் குளிப்பட்டும் முறைகள் சொல்லி தரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொண்டியிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


ஜும்ஆ பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 05.10.12 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ பயானில் உறவினர் என்ற தலைப்பில் சகோதரர் பக்கிர் முஹம்மது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 02.10.12 செவ்வாய்கிழமை அன்று மக்ரிபுக்கு பின் மர்கஸில் வியாபாரம் என்ற தலைப்பில் சகோதரர் எம்.ஓய்சுல் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.10.12 திங்கள் அன்று மக்ரிபுக்கு பின் மச்சூரில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை என்ற தலைப்பில் சகோதரர் எம். ஓய்சுல் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 03.10.12 புதன்கிழமை அன்று மக்ரிபுக்கு பின் சக்கரபாவா தெருவில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள் என்ற தலைப்பில் சகோதரர் எம். யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


ஹாஜி-யார்?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ஹஜ் சம்மந்தமாக ஊரில் நடக்கும் நூதனகலாச்சாரத்தை விளக்கி ஹாஜி-யார்? என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது.