Sunday 28 December 2014

விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.11.2014  அன்று ஆஷுரா நோன்பு சம்மந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப் பட்டது.


இராமநாதபுரம் மாவட்ட தலைமையின் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்ட தலைமையின் பொதுக்குழு...
இன்று (26/10/2014) தொண்டியில் தவ்ஹீத் மர்கஸில் வைத்து மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்பொதுக்குழுவின் முக்கிய அம்சங்கள் :
இராமநாதபுரத்தில் இதுவரை செயல்பட்டு வந்த மாவட்ட தலைமை கலைக்கப்பட்டு,
இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு,
ஒட்டுமொத்த கிளைகளின் ஒப்புதலுடன் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இப்பொதுக்குழுவில் சுமார் 52 கிளைகள் கலந்து கொண்டன. மாநில பொதுச் செயளாலர் கோவை ரஹ்மததுல்லாமாநில துணைப் பொதுச் செயளாலர் யுசுப் மற்றும் மாநிலச் செயளாலர் ஆலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கு மாவட்ட நிர்வாகிககள் :
---------------------------
தலைவர் : அப்துல் ஹமீது - பனைக்குளம்
செயலாளர் : கலிபுல்லாஹ் - தொண்டி
பொருளாளர் : சாதிக் - S.P.பட்டிணம்
தெற்கு மாவட்ட நிர்வாகிகள் :
-------------------------
தலைவர் : முகவை S.சம்சுதீன் - இராமநாதபுரம்
செயலாளர் : அஹமது கான் - சக்கரைக்கோட்டை
பொருளாளர் : செய்யது அன்வர் - இராமேஸ்வரம்
துணைத்தலைவர் : சித்திக் (முன்னாள் மாவட்ட பொருளாளர்)
துணைச்செயலாளர்கள் :
1.சுலைமான் - பரமக்குடி (முன்னாள் மாவட்ட தலைவர்)
2.
நஸ்ருதீன் - கீழக்கரை (முன்னாள் மாவட்ட செயலாளர்)
3.
அஜ்மல்கான் - மண்டபம்
தேவிபட்டிணம் - வடக்கு மாவட்ட தலைமையகமாகவும்,
இராமநாதபுரம் - தெற்கு மாவட்ட தலைமையகமாகவும் செயல்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்!
மேற்கண்ட புதிய நிர்வாகிகள் தலைமையில் இராமநாதபுரம் மாவட்டம் தாவாப்பணிகளிலும்சமுதாயப் பணிகளிலும் சிறப்பாக செயல்பட அனைவரும் துஆ செய்வோம்! 
இன்ஷா அல்லாஹ்!




Saturday 18 October 2014

சேவை இல்லத்திற்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.10.14 அன்று TNTJயின் சேவை இல்லத்திற்கு ரூ.5200/- வழங்கப்பட்டது.


தொலைக்காட்சி ஒளிபரப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.10.14 அன்று முதல் தினசரி இரவு 8 மணி முதல் 9 மணி வரை SR TV வானவில் சேனலில் TNTJயின் பல்வேறு மார்க்க அறிஞர்கள் உரையாற்றிய பயான் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

கூட்டு குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 07,08.10.14 ஆகிய தினங்களில் ஏழை எளியோர்களுக்கு கூட்டு குர்பானி இறைச்சி வழங்கப்பட்டது. மொத்தம் 15 மாடுகள் அறுக்கப்பட்டது.

ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.10.14 அன்று தொண்டி வெள்ளைமணல் தெருவில் உள்ள தவ்ஹீத் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் தியாகம் என்ற தலைப்பில் சகோதரர் முஹைதீன் அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.10.14 அன்று தொண்டி மரைக்காயர் தெரு பொட்டலில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரபா நோன்பும் திடல் தொழுகையும் என்ற தலைப்பில் சகோதர் சுஜா அலி Misc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 03.10.14 அன்று தொண்டி ஓடாவி தெருவில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேச்சின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் சகோதரி முர்ஷிதா பானு ஆலிமா Bisc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 02.10.14 அன்று தொண்டி வெள்ளைமணல் தெருவில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துல்ஹஜ் மாத அரபா நோன்பு மற்றும் திடல் தொழுகையின் நன்மைகளை பற்றி சகோதரர் முஹைதீன் அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 30.09.14 அன்று தொண்டி மரைக்காயர் தெரு பொட்டலில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துல்ஹஜ் பிறையும் அரபா நோன்பும் என்ற தலைப்பில் சகோதர் முஹைதீன் அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


Friday 17 October 2014

பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 28.09.14 அன்று தொண்டி பெரியப்பள்ளிவாசல் அருகில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துல்ஹஜ் பிறை முதல் 10 நாளில் அதிக அமல்கள் செய்வோம் என்ற தலைப்பில் சகோதரி முர்ஷிதா பானு ஆலிமா Bisc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Monday 29 September 2014

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 26.09.14 அன்று தொண்டி லெப்பை தெற்கு தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பேச்சின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் சகோதரி முர்ஷிதா பானு ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக கூட்டு குர்பானி மாடு ஒரு பங்கின் விலை ரூ.1700/- என அறிவிப்பு செய்யப்பட்டு தொண்டி முழுவதும் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 25.09.14 அன்று தொண்டி லெப்பை தெற்கு தெருவில் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் நன்மைகள் பற்றி  சகோதரர் முஹைதீன் அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



வாழ்வாதார உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 20.09.14 அன்று தொண்டி வடக்கு தெருவை சேர்ந்த சகோதரர் சாகுல் ஹமீது அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக பால் வியாபாரம் செய்வதற்கு முதல்கட்டமாக ரூ.5000/- வழங்கப்பட்டது.


இராமநாதபுரம் மாவட்ட மாணவரணி தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.09.14 அன்று இராமநாதபுரம் மாவட்ட மாணவரணி தர்பியாவுக்கு தொண்டியிலிருந்து வாகனதில் மாணவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.


நேரடி ஒளிபரப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.09.14 அன்று சென்னை மண்ணடியில் நடந்த பில்லி சூனியம் பித்தலாட்டம் பொதுகூட்டத்தை பிரஜெக்டர் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.


பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 23.09.14 அன்று மாலை 5 மணி அளவில் தொண்டி மரக்காயர் தெரு பொட்டலில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் மஷாரிக் அவர்கள் நன்மையின் பக்கம் விரைவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



Sunday 28 September 2014

நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19.09.14 அன்று ஜும்ஆ வசூல் பணம் மற்றும் நகையாகவும் (மதிப்பு : ரூ. 1,75,000/-) கோரிப்பாளையம் பள்ளிவாசல் இடம் வாங்குவதற்காக வழங்கப்பட்டது.



மக்தப் மதரசா புதிய பாடத்திட்டங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மக்தப் மதரசா 2014 செப்டம்பர்  முதல் புதிய பாடத்திட்டங்கள் வகுப்புகளாக நடைபெறும்.


A-CLASS
கிழமைகள்
தினமும் காலை 06-45 மணிமுதல்07-30, மணிவரை குர்ஆன் கிளாஸ்,தஜ்வீத் கிளாஸ்
00
தினமும்
காலை 07-30 மணிக்கு மேல் 08-00 மணிவரை கீழே உள்ள பாடதிட்டங்கள் நடத்தப்படும்
01
திங்கள்
இஸ்லாமிய கொள்கை
02
செவ்வாய்
இஸ்லாமிய ஒழுக்கங்கள்
03
புதன்
தொழுகை
04
வியாழன்
பேச்சுப்பயிற்சி
05
வெள்ளி
விடுமுறை
06
சனி
நற்குணம், அமல்களின் சிறப்புகள்
07
ஞாயிறு
சூரா மனனம்

Saturday 27 September 2014

மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 16.09.14 அன்று தொண்டி ஓடாவி தெருவை சேர்ந்த அப்துல் கரீம் மாணவி பரிதா பீவிக்கு ஆபரேசன் செய்ய ரூ.8500 வழங்கப்பட்டது.


மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 11.09.14 அன்று தொண்டி  வடக்கு தெருவை சேர்ந்த சகோதரர் கலந்தர் அவர்களின் இரண்டு வயது மகளுக்கு மருத்துவம் செய்ய ரூ.8000 வழங்கப்பட்டது.


Saturday 13 September 2014

புதியதலைமுறை தொலைக்காட்சி அக்னி பரீட்சையில் மாநிலத் தலைவர் பதில் அளிக்கின்றார்கள் இன்ஷா அல்லாஹ்!

நாளை (ஞாயிறு 14-9-2014) இரவு 7.30 மணி முதல் 8.30 வரை புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் மாநில தலைவர் பி.ஜே அவர்கள் கலந்து கொண்டு பதில் அளிக்க இருக்கின்றார்கள் இன்ஷா அல்லாஹ்.
காணத்தவறாதீர்கள்.
10612637_824233320944196_4978655359645054196_n
✔தவ்ஹீத் என்று பெயர் வைத்து முஸ்லிம்களிடம் தனித்துக் காட்டுவது ஏன்?
✔தவ்ஹீத் கொள்கைகளை ஏற்காத இமாம்களை நீங்கள் விமர்சிப்பது ஏன்?
✔இந்துக்கள் தர்காவுக்கு செல்வதை விமர்சிக்கின்றீர்களே…?
✔உங்களுடைய பிரச்சாரத்தினால் தந்தை-மகனுக்கு மத்தியில் பிளவுகள் எற்பட்டிருக்கிறதே?
✔சூனியம் வைக்க சொல்லி சவால் விட்டிருப்பதன் நோக்கம் என்ன?
✔பரிசுத்தொகையாக அறிவித்த 50 லட்சம் ஏது?
✔”சூனியம் வைத்து பாதிப்பு ஏற்படுத்தினால் 50 லட்சம்” என்று அறிவித்திருப்பது சூதாட்டமாகாதா?
✔நபிகள் நாயகம் இப்படி பந்தயம் செய்தார்களா?
✔அல்-காயிதாவை கண்டித்து போஸ்டர் ஒட்டித்தான் தங்களின் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டுமா?
✔பயங்கரவாத செயல்களில் முஸ்லிம்கள்தானே ஈடுபடுகிறார்கள்?
✔பயங்கரவாதிகளாக கைது செய்யப்படும் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்தானே?
✔சிறுபான்மையினரின் மதரஸாக்களை புதுப்பிக்க 100 கோடி நிதி ஒதுக்கிய மோடி அரசின் திட்டம் பற்றி உங்கள் கருத்து?
✔ISIS அமைப்பில் இணைத்துக் கொள்ள தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள்தானே முன்வந்திருக்கிறார்கள்?
✔RSS, BJP -தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதில் முஸ்லிம்கள்தானே கைது செய்யப்படுகிறார்கள்?
✔மோடியை ஒட்டு மொத்த மக்களும் ஆதரித்திருக்கின்றார்களே?
-இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சகோ. பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்.

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.09.14 அன்று தொண்டி மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதர் முஹம்மது முஹைதீன் அவர்கள் இறைவன் நம்மை கண்காணிகின்றான் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.09.14 அன்று மாலை 5 மணிமுதல் 6 மணிவரை தொண்டி சுலைகாமஹால் பின்புறம் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி முர்ஷிதா பானு ஆலிமா அவர்கள் பெண்களிடம் இருக்கவேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 11.09.14 அன்று தொண்டி வடக்கு தெருவை சேர்ந்த கலந்தர் மகள் இரண்டு வயது குழந்தைக்கு மருத்துவம் செய்ய ரூபாய் 8000/- வழங்கப்பட்டது.

மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10.09.14 அன்று தொண்டி குத்பா ஜமாஅத்தை சேர்ந்த சகோதரி செய்னம்பு பீவி மகளுக்கு வயிற்றில் கட்டி மருத்துவம் செய்ய ருபாய் 6000/- வழங்கப்பட்டது.

மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10.09.14 அன்று தொண்டி ஓடாவித் தெரு ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரி சாயிரா பானுக்கு தலையில் அடிபட்ட காரணத்தால் மருத்துவம் செய்ய ரூபாய் 2500/- வழங்கப்பட்டது.

Sunday 7 September 2014

மழை தொழுகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.09.2014 அன்று மழை தொழுகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சுஜா அலி, முஹம்மது முஹைதீன், அப்துல் காதர் ஆகியோர் மூன்று குழுக்களாக பிரிந்து மொத்தம் நாற்பது இடங்களில் பிரச்சரம் செய்தனர்.





Saturday 6 September 2014

தொழுகை பயிற்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.09.2014 அன்று காலை மதரஷா பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தொழுகை பயிற்சி நடைபெற்றது.




மழை தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.09.2014 அன்று தொண்டி மேலப்பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு உட்பட்ட அன்னிவூற்று குளத்தில் காலை 7 மணி அளவில் மழை தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.






Friday 25 July 2014

பித்அத்திற்கு எதிராக விவாத அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 25.07.14 அன்று ராத்திபு மற்றும் ரமலான் பிறை 27ல் தான் லைலதுல் கத்ர் இரவு எனக்கூறும் உலமாக்கள் மற்றும் ஜமாஅத்தினருக்கு விவாத அழைப்புவிடுத்து 100 போஸ்டர்கள் தொண்டி மற்றும் சுற்றுப்புறங்களில் ஒட்டப்பட்டது.

Thursday 24 July 2014

2014ம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 2014ம் ஆண்டு ரமலான் முதல் பிறையிலிருந்து இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.


Wednesday 21 May 2014

கோடை கால வகுப்பு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10-5-2014 அன்று முதல் மாணவ மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் நடைபெற்றது.  இதில் சுமார் 120 மாணவ மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  இன்று (21-4-2014) கோடை கால நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி என்பதால்  இதில் முதலாவதாக இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சகோ : அன்சர்கான் உரை நிகழ்த்தி அதைத் தொடர்ந்து சகோ : செய்யது அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதர சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.