Saturday 10 November 2012

கிராமபுர தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.11.12 வெள்ளிக்கிழமை மஹ்ரிபு தொழுகைக்கு பின் தொண்டியிலிருந்து சுமார் 6 km தொலைவில் உள்ள வீரசங்கிலிமடம் என்ற கிராமத்தில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொண்டி சேர்ந்த சகோதரர்  M. ஆஷிப் அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்த உரையில் "நாம் அன்றாட வாழ்க்கையில் சர்வசாதாரணமாக ரெடிமேட் பொய்களை சொல்லி வருகிறோம். இந்த காரியம் நம்மை நரகத்திற்கு கொண்டுபோய் சேர்க்கும்" என்ற தொனியில் பேசினார்.
அடுத்தபாடியாக தொண்டி சேர்ந்த N. மஷாரிக் அவர்கள் மறுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்த உரையில் "ஒரு மனிதனின் உயிர் பறிக்கப்படும் போது நல்லடியாராக இருந்தால் அவருக்கு சொர்க்கவாசி என்ற நற்ச்செய்தி கூறப்படும் என்றும், ஒருவர் தீய அடியாராக இருந்தால் கொருத்த முகமுடைய, கொடூரமான கண்களை உடைய வானவர்கள் உயிரை கைப்பற்றுவார்கள்" என்ற கருத்துப்பட நெஞ்சம் உருக உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து பெண்களும் ஆர்வமாக கேள்வி கேட்டனர். 




No comments:

Post a Comment