Tuesday 6 November 2012

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.11.12 வியாழக்கிழமை அஸருக்கு பின் தொண்டி M.G.R. நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சகோதரர் M. ஓய்சுல் அவர்கள் இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்த உரையில் "நமது சமுதாயத்தில் இளைஞர்கள் T.V., சினிமாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றியும், கல்வி கற்க செல்கிறோம் என்ற பெயரில் அந்நிய ஆண்களிடம் ஓட்டம் எடுப்பது போன்ற தவறான காரியங்களை பட்டியலிட்டதோடு பெற்றோர்கள் இதை கண்காணிக்க வேண்டும். இல்லையேல் உலகத்தில் கெடுவதோடு மறுமையிலும் கைசேதம்தான்" என ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment