Tuesday 4 December 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 28,29.11.12 ஆகிய இரு  தினங்களில் மஹ்ரிப் தொழுகைக்குப்பின் பசிப்பட்டிணம் கந்தூரி விழா அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத்தரும் இடம் என்பதையும், இதனை அனைத்து தெரு ஜமாஅதார்களும் மக்களுக்கு இதை அல்லாஹ்விற்கு இனைவைக்ககூடிய காரியம் என்பதை உணர்த்த வேண்டும் என்பதை சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் விளக்கினார்.




Thursday 29 November 2012

துண்டு பிரசுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ஆஷுரா நோன்பும், நன்மையும் என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் தொண்டி, எம்.ஆர். பட்டிணம் ஆகிய ஊர்களில் விநியோகிக்கப்பட்டது.


சிறு தொழில் உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10.11.12 அன்று தொண்டி தெற்கு தெருவை சேர்ந்த சகோதரர் இஸ்மாயில் என்பவருக்கு சிறு தொழில் உதவியாக ரூ. 4000/- வழங்கப்பட்டது.

Wednesday 28 November 2012

தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 25.11.12 ஞாயிற்றுக்கிழமை தொண்டி மர்கஸில் வைத்து புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எம்.ஆர். பட்டிணம் கிளை நிர்வாகிகளுக்கு காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை தர்பியா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தொழுகை பயிற்சி, நல்லொழுக்க முறை, நிர்வாகிகள் நடந்து கொள்ளும் முறை ஆகியவைகளை சகோதரர் எம். யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் பயிற்சி அழித்தார்கள்.

தனி நபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 16.11.12 அன்று தனி நபர் தாவாவில் புரோட்டா மாஸ்டர் கையில் கட்டப்பட்டிருந்த தாயத்தின் விளைவை எடுத்துரைத்து தாயத்து அவர் கையாலேயே எடுக்கப்பட்டது.

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 23.11.12 வெள்ளிக்கிழமை M.G.R. நகரில் அஸருக்கு கிப்ட் ஏகத்துவம் இணைவைப்பும் என்ற தலைப்பில் சகோதரர் சித்தீக் உரைநிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மஹ்ரிபுக்கு பின் நாவைப் பேணுவோம் என்ற தலைப்பில் சகோதரர் தொண்டி எம். ஆசிப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

Tuesday 27 November 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.11.12 வியாழக்கிழமை அஸருக்கு பின் ஏகத்துவமும் இணைவைப்பும் என்ற தலைப்பில் சகோதரர் தொண்டி அப்துர் ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
மஹ்ரிபுக்கு பின் வட்டி ஓர் நரகப் படுகுழி என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

உணர்வு, ஏகத்துவம், தீன்குல பெண்மணி பற்றி விளம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக சைக்கிளில் உணர்வு, ஏகத்துவம், தீன்குல பெண்மணி பற்றி விளம்பரம் செய்யப்பட்டது.

தனி நபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18.11.12 அன்று வீடுவீடாக தனி நபர் தாவா செய்யப்பட்டது. அப்போது கிழக்குத் தெருவில் உள்ள வீட்டின் ஓட்டு சட்டத்தில் எலும்பிச்சை கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. இது அல்லாஹ்விற்கு இணைவைக்கும் செயல் என்பதை அந்த வீட்டு சகோதரியிடம் விளக்கப்பட்டு அதை அறுத்து எறியப்பட்டது.

Monday 26 November 2012

45 வருடங்களாகியும் திறக்கபடாமலேயே உள்ள பள்ளிவாசல்

தேவகோட்டை அருகில் உள்ள பெரியகாரை என்ற ஊரில்தான் நீங்கள் பார்க்கும் இந்த பாழடைந்த பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டு சுமார் 45 வருடங்களாகியும் திறக்கபடாமலேயே உள்ளது. ஆனால் என்ன கூத்து என்றால்! இந்த பள்ளிக்கு அருகில் உள்ள தர்ஹாமட்டும் அலங்கரிக்கப்பட்டு பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது. என்ன அவ்லியா பக்தி!!!

தீன்குல பெண்மணி மாத இதழ் இலவசமாக வழங்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18.11.12 நவம்பர் மாத தீன்குல பெண்மணி மாத இதழ் 250 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வரக்கூடிய மாதத்திற்கு சந்தா பிடிக்கப்பட்டது.

Monday 12 November 2012

மாற்று மதத்தவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் நூல் வழங்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சகோதரர் சிராஜுதீன் அவர்கள் 12.11.12 அன்று கீழக்கரை காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கும், கீழக்கரை மகளீர் காவல் துறை துணை ஆய்வாளர் அவர்களுக்கும், திருப்பாலைக்குடி காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கும் மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் நூல்கள் வழங்கினார்.

Sunday 11 November 2012

M.R. பட்டிணத்தில் புதிய கிளை ஆரம்பம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 11.11.12 ஞாயிறு மாலை 5 மணி அளவில் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சகோதரர் சிராஜுதீன் அவர்கள் தலைமையில், மவ்லவி சகோதரர் யாசிர் அரபாத் முன்னிலையில் தொண்டிக்கு அருகாமையில் உள்ள M.R. பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டது.

தலைவர்                        :  J. பாஷித் அஹமது   8508070605
 
செயலாளர்                   :  K. செய்யது அபுதாஹிர்  9787120371
 
பொருளாளர்                :  N. சிராஜ் முஹமது (மவ்லவி - மன்பஈ)  9750526540
 
துணை தலைவர்       :  S. முஹமது ஹாஜி   8973767644
 
துணை செயலாளர்  :  M.  முஹமது சலீம்  9842753021
 

 

Saturday 10 November 2012

உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை 10.11.12 சனிக்கிழமை அசருக்குபின் தொண்டிக்கு அருகில் உள்ள சகோதரர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணி என்ன? என்பது பற்றி உள்ளரங்கு நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது. அதற்கு பின் சகோதரர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டது.

ஜும்ஆ பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.11.12 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான் புதுக்கோட்டை மாவட்ட பேச்சாளர் சகோதரர் மக்தூம் அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


கிராமபுர தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.11.12 வெள்ளிக்கிழமை மஹ்ரிபு தொழுகைக்கு பின் தொண்டியிலிருந்து சுமார் 6 km தொலைவில் உள்ள வீரசங்கிலிமடம் என்ற கிராமத்தில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொண்டி சேர்ந்த சகோதரர்  M. ஆஷிப் அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்த உரையில் "நாம் அன்றாட வாழ்க்கையில் சர்வசாதாரணமாக ரெடிமேட் பொய்களை சொல்லி வருகிறோம். இந்த காரியம் நம்மை நரகத்திற்கு கொண்டுபோய் சேர்க்கும்" என்ற தொனியில் பேசினார்.
அடுத்தபாடியாக தொண்டி சேர்ந்த N. மஷாரிக் அவர்கள் மறுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்த உரையில் "ஒரு மனிதனின் உயிர் பறிக்கப்படும் போது நல்லடியாராக இருந்தால் அவருக்கு சொர்க்கவாசி என்ற நற்ச்செய்தி கூறப்படும் என்றும், ஒருவர் தீய அடியாராக இருந்தால் கொருத்த முகமுடைய, கொடூரமான கண்களை உடைய வானவர்கள் உயிரை கைப்பற்றுவார்கள்" என்ற கருத்துப்பட நெஞ்சம் உருக உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து பெண்களும் ஆர்வமாக கேள்வி கேட்டனர். 




Thursday 8 November 2012

போலி உலமாவின் உளறல் பேச்சு

 தொண்டிக்கு அருகே உள்ள M.R. பட்டிணத்தை சேர்ந்த ஒரு கொள்கை சகோதரர் கடந்த 04.11.12 ஞாயிற்றுகிழமை அன்று நபிவழி திருமணம் நடைபெற முடிவு செய்திருந்தார். இதை தொண்டி TNTJ கிளைக்கு தெரியப்படுத்தி, TNTJ தொண்டி நிர்வாகம் M.R. பட்டிணம் சுன்னத் ஜமாஅத் தலைவரை நேரில் சந்தித்தது.

 சுமார் அரை மணி நேர பேச்சுவார்தைக்கு பின் நான் தனி ஆளில்லை, நிர்வாகத்தில் கலந்து சொல்கிறேன். என்றார். 03.11.12 அன்று அஸர் தொழுகைக்கு பின் M.R. பட்டிணம் சுன்னத் ஜமாஅத் ஊர்கூட்டம் என்ற பெயரில் ஆலோசனை நடத்தி தவ்ஹீத் ஜமாத்திற்கு இங்கு இடமில்லை. திருமணத்தை நாங்கள்தான் நடத்துவோம் என்று மாப்பிள்ளையின் தாயாரிடம் மிரட்டியதால், தாயார் கண்ணீருடன் மாப்பிள்ளையிடம் நபிவழி திருமணதிற்கு தடைவிதித்தார்.திருமண நிகழ்ச்சியில் அல் அஜ்ஹரியா அரபிக் கல்லூரி பேராசிரியர் புதுப்பட்டிணத்தை சேர்ந்த அஹ்மது ஜலாலுதீன் அவர்கள் உரை நிகழ்த்தும் போது திருமணங்களில் கலிமா சொல்லாத தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தை விபச்சாரத்தில் பிறந்ததற்கு சமம் என்றும் என்போன்ற ஆலிம்களுக்கு கலிமா தேவை இல்லை என்றும் கொக்கரித்தார்.

   இதற்கு ஆதாரம் காட்டத் தயாரா என்று TNTJ தொண்டி கிளைக்கு சொந்தமான கரும்பலகையில் எழுதப்பட்டது.


பூரண நலமடைய அனைவரும் துஆ செய்வோம்

தொண்டி வடக்குதெரு சுன்னத் ஜமாஅத் மேலப்பள்ளிவசால் முஅத்தீன் அவர்களுக்கு நுரைஈரலில் சளி ஏற்பட்டதால் இரத்த வாந்தி எடுத்து மிகவும் இயலாத நிலையில் தேவகோட்டை தனியார் மருத்துவமனை I.C.U.வில் சேர்க்கப்பட்டார். அவர்களை தொண்டி கிளை 08.11.12 அன்று நேரில் சென்று ஆறுதல் கூறி தேவையான உதவி செய்தது. அவர் பூரண நலமடைய அனைவரும் துஆ செய்வோம்.

வரதட்சணை ஒழிப்பு பேனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.11.12 அன்று கிழக்குதெருவில் உள்ள பெரிய பள்ளிவாசல் எதிரில் வரதட்சணை ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு பேனர் 10x5 அளவில் வைக்கப்பட்டுள்ளது.

Tuesday 6 November 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 02.11.12 வியாழக்கிழமை மஹ்ரிபுக்கு பின் தொண்டி மர்கஸில் உண்மை தப்லீக் ஜமாஅத் யார்? என்ற தலைப்பில் சகோதரர் M. யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்.

ஜும்ஆ பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 03.11.12 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயானில் மறுமைக்கு அஞ்சுவோம் என்ற தலைப்பில் சகோதரர் செய்யது (தேவிப்பட்டினம்) அவர்கள் உரை நிகழ்த்தினார்.

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 02.11.12 வெள்ளிக்கிழமை அஸருக்கு பின் லெப்பை சாஹிபு தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருமணம் என்ற பெயரில் நடத்தப்படும் அனாச்சாரங்களை கண்டித்து சகோதரர் M. ஓயசுல் உரை நிகழ்த்தினார்.
அதை தொடர்ந்து மஹ்ரிபுக்கு பின் அந்த தெருவில் உலாவி வரும் குலப்பெருமையை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது என்பதை சகோதரர் M. யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதற்கு பின் வீடுகளில் தபால் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.11.12 வியாழக்கிழமை அஸருக்கு பின் தொண்டி M.G.R. நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சகோதரர் M. ஓய்சுல் அவர்கள் இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்த உரையில் "நமது சமுதாயத்தில் இளைஞர்கள் T.V., சினிமாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றியும், கல்வி கற்க செல்கிறோம் என்ற பெயரில் அந்நிய ஆண்களிடம் ஓட்டம் எடுப்பது போன்ற தவறான காரியங்களை பட்டியலிட்டதோடு பெற்றோர்கள் இதை கண்காணிக்க வேண்டும். இல்லையேல் உலகத்தில் கெடுவதோடு மறுமையிலும் கைசேதம்தான்" என ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தினார்.

Wednesday 31 October 2012

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்.
 

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு
A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்
டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்
விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்
விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்
சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,
அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது
எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்
உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக
விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்
இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)
இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது
மனிதனால் பறக்க முடிவும் என்பது பற்றி இறைவன் திருமறையில்…
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.
அல்குர்அன் 55-33


Tuesday 30 October 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 30.10.12 செவ்வாய்கிழமை அன்று மஹ்ரிபுக்கு பின் பேராசை என்ற தலைப்பில் சகோதரர் ஓயசுல் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.10.12 அன்று தொண்டி ஓடாவி தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அடிப்படைக் கொள்கை என்ற தலைப்பில் சகோதரர் ஓயசுல் உரை நிகழ்த்தினார்.

Monday 29 October 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.10.12 அன்று மஹ்ரிபுக்கு பின் மர்கஸில் இப்ராஹிம் நபியின் ஏகத்துவ பிரச்சாரம் என்ற தலைப்பில் சகோதரர் ஓய்சுல் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

கூட்டு குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 28.10.12 அன்று 16 மாடுகள் கூட்டு குர்பானிக்காக வழங்கப்பட்டது. தொண்டி, வட்டாணம், மச்சூர், P.V. பட்டிணம், வீரசிங்கமடம், புதுப்பட்டிணம் ஆகிய ஊர்களுக்கு கறி வழங்கப்பட்டது.  95 ஆட்டுத் தோலும், 18 மாட்டுத் தோலும் வசூல் செய்யப்பட்டது.

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.10.12 சனிக்கிழமை மழையின் காரணமாக தொண்டி தவ்ஹீத் மர்கஸ் முன்பு உள்ள நாச்சியா மஹாலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

Wednesday 24 October 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 24.10.12 புதன்கிழமை அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் தொண்டி மர்கஸில் ஜாக் வெளியிட்ட பிறை குழப்ப நோட்டீஸிற்கு வரிக்கு வரி மவ்லவி எம்.யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் குர்ஆன் & ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்கள். இதில் பல சகோதரர்கள் பங்கெடுத்தனர். அல்ஹம்துலில்லாஹ்

Tuesday 23 October 2012

பயான் நிகழ்ச்சி

ஜாக் சார்பாக தொண்டியில் வரும் வியாழக்கிழமைதான் அர(f)பா நோன்பு நோற்க வேண்டும், அர(f)பாவில் அன்றுதான் ஹாஜிகள் கூடுவார்கள் என்ற பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அதற்கு மறுப்பு விளக்கமளிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 23.10.12 செவ்வாய்கிழமை மஹ்ரிபுக்கு பின் தொண்டி மர்கஸில் சகோதரர் L.மஷாரிக் அவர்கள் ர(f)பா நாள் எது? ஒரு விளக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


Monday 22 October 2012

நோட்டிஸ் விநியோகம்

22.10.12 திங்கள்கிழமை மச்சூர் கிளை சார்பாக சத்தியத்தை எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.






பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.10.12 திங்கள்கிழமை மஹ்ரிபுக்கு பின் தொண்டி மர்கஸில் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்.



Sunday 21 October 2012

தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.10.12 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபுக்கு பின் தனிநபர் தாவாவில் வடை வண்டிக்காரரை தொழுகைக்காக அழைப்புவிடப்பட்டது.

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.10.12 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபுக்கு பின் தொண்டி மர்கஸில் சபி(f)ன் ஒழுங்குகள் என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்.

தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 20.10.12 சனிக்கிழமை இஷாவுக்கு பின் தனிநபர் சந்திப்பில் தொண்டியில் ஒரு சுன்னத் ஜமாஅத் பள்ளியின் முஅத்தீன்(பிலால்) மவ்லிது, தட்டு, தகடு, தாயத்து, தர்ஹா வழிபாடு ஆகியவற்றை செய்யக்கூடியவராக இருந்ததால் அந்த சகோதரரை நம்முடைய இடத்திற்கு வரவழைத்து அவருக்கு இஸ்லாமிய அடிப்படை கொள்கை பற்றி விளக்கப்பட்டது. மவ்லிதில் உள்ள இணைவைப்பு வரிகள் பற்றியும், தர்ஹா வழிபாடு ஓர் இணைப்பு என்பதையும் விளக்கப்பட்டது. அவரும் நம்மிடையே கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதில் கொடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் இந்த கலந்துரையாடல் நடந்தது. இறுதியில் இஸ்லாமிய அடிப்படை கொள்கை, தர்ஹா வழிபாடு, ஏகத்துவமும் இணைவைப்பும் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.


Saturday 20 October 2012

வன்னியர் சங்கத்தின் போஸ்டர்

தொண்டியில் உள்ள செய்யது முஹம்மது அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெயயக்கோரி வன்னியர் சங்கத்தின் போஸ்டர் தொண்டியில் ஒட்டப்பட்டது.

ஜும்ஆ பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19.10.12 அன்று தொண்டி மர்கஸில் நட்புக்கு இலக்கணம் என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்.


பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19.10.12 வெள்ளிகிழமை மஹ்ரிபு தொழுகைக்கு பின் வீரசிங்கமடம் என்ற கிராமத்தில் பெண்கள் பயான் & கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்.


தொண்டியில் பலத்தமழை

தொண்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 19.10.12 அன்று இரவு பலத்தமழை பெய்தது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தொண்டியில் 27cm மழை பதிவாகியுள்ளது.